
சதொசவில் ஒருகிலோ அரிசியை 100 ரூபாய்க்கு விற்க முடியும் என்றால், ஏனைய வர்த்தகர்கள் ஏன் அவ்வாறு விற்பனை செய்ய முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்,
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
ஆனாலும், சந்தைப் பெறுமானங்களை விட சதொச நிறுவனங்களில் பொருட்களை குறைந்தளவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
சதொச நிறுவனத்தில் சிவப்பரிசி ஒரு கிலோ கிராமின் விலை 105 ஆகவும் நாட்டரிசியின் விலை 100 ஆகவும் காணப்படுகின்றது.
மேலும் தேங்காய் ஒன்றினை 75 ருபாய்க்கும் வத்தோச நிறுவனங்களில் பெற்றுகொள்ள முடியும்.
இந்த விலையில் எம்மால் பொருட்களை வழங்க முடியும் என்றால் ஏனையவர்கள் ஏன் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்று ஆராய்ந்து வருகின்றோம்.
கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் நோக்கம் அனைத்து வர்த்தகமும் தட்டுப்பாடின்றி சீராக நடைபெறவேண்டும் என்பதனால். ஆனால் சுமார் 300 ரூபாய் வரையில் அரிசியின் விலை செல்லும் அளவுக்கு இப்போது நிலைமை காணப்படுகிறது.- என்றார்.