
பொருட்களின் விலைகளை நாம் வேண்டுமென்று அதிகரிக்கவில்லை, எதிர்காலத்தில் விலைகள் குறைக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் தேங்காய் விலையினை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் அனைத்து சதொச நிறுவனங்களில், குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் பெரிய தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலை 75 ருபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பெருமதி அதிகரிப்பதனால் நாட்டின் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலை வருகின்ற காலங்களிர் மாற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. விலைகளை அதிகரித்து மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவது எமது நோக்கம் இல்லை. – என்றார்.
சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.