அடுத்த ஜனாதிபதி சஜித் தான் – உறுதியாகக் கூறும் திகாம்பரம் எம்.பி

அடுத்து வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச கட்டாயம் வெற்றிபெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டும் என அவர் ஒருநாளும் சொல்லவில்லை. இந்த அரசின் நிலை அறிந்து விவசாயிகள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் விவசாயிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றோம்.

நாட்டில் அரிசி இருக்கின்றது. இயற்கை விவசாயம் செய்வோம் என்று கூறிக்கொண்டு பிறநாடுகளில் இருந்து அரிசியினை இறக்குமதி செய்கின்றனர். இவ்வாறான ஆட்சி நிலைமை சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இருக்காது. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *