
அனுராதபுரம் நகரில் பகுதி நேர வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவி இடைவேளையில் குபிச்சக்குளம் குளத்திற்கு அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையன் பறித்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.
அப்போது மாணவியின் தோழி அந்த கொள்ளையனை பிடிக்க, அந்த நபருடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது சந்தேக நபரின் தொலைபேசி தவறி கீழே விழுந்துள்ளதுடன், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
கலேன்பிந்துனுவௌ பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நகருக்கு வந்திருந்த உயர் தர வகுப்பு மாணவியின் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு மாணவி தனது தோழியின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை துரத்திச் சென்று அவருடன் சண்டையிட்டுள்ளதுடன், அப்போது அந்த நபரிடம் இருந்து தவறி விழுந்த தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்துள்ள தொலைபேசியை ஊடாக சந்தேக நபரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுதந்திரதின விழா அணிவகுப்பில் ஆராயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்!