<!–
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி மின்முனையத்திற்கு தேவையான 500 மெற்றிக் டன் எரிபொருள் வழங்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


