
கொழும்பு, பெப் 1: கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்படுள்ளது.
இது தொடர்பாக மின் சக்தி அமைச்சின் மூத்த அதிகாரி கூறுகையில் “கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்படுள்ளது. இதனால், 60 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். இந்த மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான 500 மெட்ரிக் டன் எரிபொருளை பெறும் நடவடிக்கைகளை முடுக்கியுள்ளோம். எரிபொருள் கிடைத்தவுடன், இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.