இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைபிடிக்க வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களும் பாதிக்கப்பட்ட தரப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்,கரிநாளாக குறித்த தினத்தை பிரகடனம் செய்து, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினமன்று காலை 10 மணிக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் படி அனைவரையும் அழைக்கின்றோம் என ஏற்பாட்டு குழு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *