
கொழும்பு, பெப் 1:
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசலை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
40,000 மெட்ரிக் டன் டீசல், 40,000 மெட்ரிக் டன் பெட்ரோலை கொள்முதல் செய்யவது தொடர்பாக, எரிசக்தி அமைச்சகம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி, 40,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றுமதி செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இது தொடர்பாக, எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.