
வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்ச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன் என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு சடலங்களாக கரையொதுங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற இருவரும் அதன் பின்னர் காணாமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வந்தது. கடந்த 28ஆம் திகதி தேடுதலின் போது, காணாமல் போன மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
அவர்கள் பயணித்த படகு, பெரிய படகால் மோதி மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு சடலம் ஆழியவளை பகுதியில் கரையொதுங்கியது. மற்றைய சடலம் கேவில் கடற்கரைக்கு அண்மையாக கடலில் மிதந்த நிலையில் அடையாளம் காணப்பட்டது. அந்த சடலமும் தற்போது ஆழியவளைக்கு கொண்டு செல்லப்பட்டது.