15 வயதில் பாவித்த போதை பொருளால் பரிதமாக உயிரிழந்த மாணவன்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து, 15 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு தவறி விழுந்த 15 வயது மாணவனின் பிரேத பரிசோதனையில் அவர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

தாயும் தந்தையும் இல்லாத நேரத்தில் மாணவன் இவ்வாறு கீழே விழுந்துள்ளான்.

இந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளானவனர் என தெரியவந்தது.

கட்டிடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *