
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு குற்ற செயலுக்காக வழக்கு பதிவு செய்யும் போது, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு, பொலிஸாரால் தமிழ் மொழி மூலம் வழக்கு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எஸ் லியனகே தெரிவித்துள்ளார்.
யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று ஊடகவியாளர்களை சந்தித்த அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தாராளமாக தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகவே ஒரு குற்றச் செயலுக்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யும் போது, தமிழ் மொழி மூலம் வழக்கு எழுதப்பட வேண்டும் அல்லது, குறித்த வழக்கு தொடர்பில் தமிழில் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும்.
தங்கள் மீது என்ன வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெளிவின்மை காணப்பட்டால் உரிய பொலிஸ் நிலையத்தில் அதற்கான தெளிவான விபரங்களை பெற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும்.
மேலும் முக்கிய முறைப்பாடுகள் தொடர்பில் 24 மணி நேரத்தில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும்.
அத்துடன் பொலிஸார் ஏதும் தவறிழைத்தால் அது தொடர்பில் எனக்கு நேரடியாக முறைப்பாடு செய்யலாம். – என்றார்.
தொடர் விடுமுறை: மக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை