
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர் மடம் பகுதியில் மீனவர்களால் இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் போராட்ட இடத்துக்கு மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் சென்று, மீனவர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல், யாழ்ப்பாண கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்களின் கொலை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு வேண்டி இன்று காலை முதல் வீதியை முடக்கி மீனவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்றுள்ள மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில்,
உங்கள் பிரச்சினை தொடர்பில் நான் உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். கொழும்பிலிருந்து கட்டளை கிடைத்தவுடன் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
வடக்கு கடற்படை அதிகாரியுடன் நான் கதைப்பேன். நீங்கள் அமைதியாக போராடுங்கள். எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைவாக உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தருவேன். இது இரு நாட்டு பிரச்சினை. உயர் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். – என்றார்.
இந்த நிலையில் போராட்ட இடம் சற்று அமைதியாகியுள்ளது. போராட்டகாரர்கள் இன்னமும் கலைந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.