இலங்கையின் தேங்காய்ப் பாலுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி! குவியும் பெருந்தொகை டொலர் SamugamMedia

இலங்கையின் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக தேவை காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் 40,000 மெட்ரிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இலங்கையின் தேங்காய் பாலுக்கு அதிக தேவை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply