நாட்டில் பல இடங்களில் மின் துண்டிப்பு!

நாட்டில் பல இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின்சார மையத்தின் 3வது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.

இந்த மின்பிறப்பாக்கி நேற்றைய தினமே திருத்தப்பட்டு, உற்பத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

எனினும் இன்று அது மீண்டும் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின்சார அலகுகளில் 270 மெகாவோட்ஸ் அலகுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந் நிலையிலேயே மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் மாதம் வரை மின் வெட்டு இருக்காது என மின் சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *