
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், கொரோனாத் தொற்றுநோயால் பொதுமக்கள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகியிருக்கமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் 15,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் தொற்றுநோயைத் தணிப்பது முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.
நல்லாட்சி அரசாங்கம் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அவர்கள் விமான நிலையங்களை மூடிவிட்டு ஏனைய நாடுகளைப் போலவே முடக்கலைகளை விதித்திருப்பார்கள்.
தடுப்பூசி போடும் பணியை முன்னதாகவே தொடங்கியிருப்போம். தற்போது தடுப்பூசி போடும் பணி திருப்திகரமாக இல்லை.
குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது அரசாங்கம் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.
50 வீதம் திறனுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்தது. இருப்பினும் பாடசாலைகள் அண்மையில் முழு திறனுடன் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
வயது வந்தோருடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், குழந்தைகள் பெரியவர்களை விட கொரோனா நோயால் பாதிக்கப்படுவது மிகவும் அதிகம்.
;.
கல்வித் துறை தொடர்பான தீர்மானங்கள் கவனமாக எட்டப்பட வேண்டும்.- என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.