
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக குற்றச்சாட்டில் பருத்தித்துறை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, கடற்படையினரும் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரில் 2 மீனவர்கள் 17 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தமிழ்நாடு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.