
யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் நேற்றையதினம் வெடிகுண்டு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.
குறித்த காணியில் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதுதொடர்பில், விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குண்டு மீட்கப்பட்டது.