சீமெந்து மாபியாவை ஒழியுங்கள்! – கட்டுமான சங்கத்தின் தலைவர் கோரிக்கை

நாட்டில் தற்போது சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேவையான பொருட்கள் வராத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

சீமெந்து தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு சீமெந்து தொழிற்சாலைகள் மூலம் சீமெந்து மாபியா ஒழிந்துவிடும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது 3,00,000 சீமெந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இன்று சீமெந்து கப்பல் ஒன்று வந்துள்ளது. அதில் 2, 00,000 சீமெந்து பொதிகள் உள்ளது.

எதிர்காலத்தில் சீமெந்து தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுமாயின் தற்போதுள்ள பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியும்.

தற்போது சீமெந்து மாபியா உள்ளது. இந்த விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூர் சீமெந்து உற்பத்தியால் மார்ச் மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு குறையும்.

சீமெந்து இறக்குமதி செய்பவர்களால் இந்த மாபியா நடத்தப்படுகிறது. தயவு செய்து இந்த மாபியாவை ஒழியுங்கள்.

நுகர்வோர் அதிகாரசபை உரிய முறையில் சோதனைகளை மேற்கொண்டிருந்தால் எவ்வாறு அதிக விலைக்கு விற்க முடியும்.

பொருட்களின் விலை மாறும்போது, கட்டுமானத்தின் விலையும் மாறுகிறது. அதிகாரிகள் தலையிட்டால் இதை தடுக்க முடியும் இவ் பாரிய விலையில் வீடு கட்ட முடியாது. எனவே இச் செயற்பாட்டை நிறுத்துங்கள். – என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *