1.83 லட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு: வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தகவல்

கொழும்பு, பெப் 2:

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், இலங்கையர்கள் பணி புரியும் வகையில், வெளிநாடுகளில் சுமார் 1.83 லட்சம் வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளன.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக மூத்த அதிகாரி கூறியது:

ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கத்தார் உள்ளிட்ட 22 நாடுகளில் இலங்கையர்கள் பணியாற்றும் வகையில் வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளோம்.

மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை தொடங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *