கறுப்பு சந்தை டொலர்களைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கவில்லை: வெளிவிவகார அமைச்சகம் மறுப்பு

கொழும்பு, பெப் 2:

இறுதிக்கட்டப் போரின்போது, கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து அரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியதாக வெளிவந்த ஊடகச் செய்திகளை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

“கருப்புச் சந்தை டாலர்களைப் பயன்படுத்தி வட கொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கினோம்- அமைச்சர் பசில்” என்ற தலைப்பில் உள்ளூர் செய்தி இணையதளத்தில் வெளிவந்த செய்தியின் மீது வெளிவிவகார அமைச்சகம் கவனம் செலுத்தியது.

இது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பேசினார். அப்போது, தன்னை தொடர்புபடுத்தி வெளியான செய்தியை பசில் ராஜபக்ச மறுத்துள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *