உக்ரைன் விவகாரம் : ஐ.நாவின் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என சொல்லப்படுகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடியது. இதனை ரஷ்யா ஆட்சேபித்ததுடன், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், அயர்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

அதேநேரம் இந்தியா, கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. வாக்களிப்பை புறக்கணித்த நாடுகளுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *