ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் ஐவர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான தொழிலாளர்கள் குறித்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *