நாடாளுமன்ற ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

கொழும்பு, பெப் 2: கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடாளுமன்ற ஊழியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” நாடாளுமன்ற ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவைச் சேர்ந்த பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றில் இருந்து குணமாகி, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *