எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின் நிலையம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் எந்த சிக்கலும் இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என தெரிவித்தார்.
