ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்காம் ஆண்டில் கற்கும் நான்கு மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேரைக் கொண்ட குழுவினர் இரண்டு வாகனங்களில் வந்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
