
கொழும்பு, பெப் 2:
சட்டவிரோதமான முறையில் 46,000 யூரோவை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் ” எமிரேட்ஸ் EK 649 விமானம் மூலம், துபாய், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளிநாட்டுப் பணத்தை கடத்த முயன்ற இருவரைக் கைது செய்துள்ளோம். இவர்களிடம் இருந்து 46,000 யூரோ மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி, ரூ. 11 மில்லியன் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.