ஏ9 வீதியை முடக்கி நாளை யாழ். மீனவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், மற்றும் ஏ9 வீதியை முடக்கி நாளை போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீன்வர்களின் அத்து மீறலை கண்டித்து 3 நாட்களாக தொடர்ச்சியாக போராடி வரும் மீனவர்களுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் நாளை முற்றுகை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் சுதந்திர தினத்தில் தேசிய கோடியை ஏற்ற விடாமல் போராட்டம் கடுமையாக இருக்கும் என்றும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

எழுத்து மூலமாக வாக்குறுதி தரும் வரையில் போராட்டம் தொடரும்! யாழ். மீனவர்கள் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *