பிரபல அறிவிப்பாளரை மிரட்டிய திருமதி இலங்கை அழகி

திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம்மை மிரட்டியதாக பிரபல அறவிப்பாளரும் தொகுப்பாளருமான தானு இன்னிசைத்தம்பி, முறைப்பாடு செய்துள்ளார்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திருமதி உலக அழகி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் தானா ஜோன்சனுடன் அண்மையில் தாம் செய்த நேர்காணல் தொடர்பில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக புஷ்பிகா தம்மை அச்சுறுத்தியதாக தானு தெரிவித்துள்ளார்.

இம்முறை திருமதி உலக அழகி போட்டியின் போது தமக்கு கிடைக்கவிருந்த பட்டத்தை, முன்னாள் திருமதி பிரபஞ்ச அழகி ரோசி சேனாநாயக்க தடுத்து விட்டதாகவும் புஷ்பிகா அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் தாம் 4ம் இடத்தை வென்றதாக புஷ்பிகா முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், முதல் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டதாகவும் நான்காம் இடம் வழங்கப்படவில்லை எனவும் திருமதி உலக அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் ஜோன்சன், தானுவிடம் கூறியிருந்தார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் புஷ்பிகா தம்மை தொலைபேசியில் மிரட்டியதாக தானு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *