ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பணிப்பு

ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வௌியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்தனர்.

ராகம வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் சில மாணவர்கள் மீது விடுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *