
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரிப்பாயில் நேற்று எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியோரம் உள்ள பாவனையற்ற காணி ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான பொருள் ஒன்று காணப்படுகின்றது என்று அச்சுவேலிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த எறிகணை மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி பெற்று எறிகணையை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.