
சுதந்திர கட்சி உறுப்பினர்களும் கோட்டா அரசு மதிப்பு வழங்க வேண்டும் என சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
முதலில் அமைச்சர்களிற்கான கடமை வழங்கி அவற்றை நடைமுறை படுத்த வேண்டும்.
இப்போது மின்சார துண்டிப்பு குறைபாடுகள் ஆகியவை காணப்படுகின்றன.
எரிசக்தி அமைச்சும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.உண்மையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது.அவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும்.
எங்களுடைய கட்சியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
அதே போல கோட்டபாய ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, தேர்தலின் போது நம் இலங்கை சுதந்திர கட்சியினர் ஜனாதிபதிக்கு அதிகமாக உழைத்தனர்.
எனவே அவர்களிற்கான மதிப்பு வழங்க வேண்டும் என்றார்.