இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவு கடன்: இந்தியா – இலங்கை இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு, பெப் 2:

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க இந்தியா அண்மையில் ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக இரண்டு நாட்டின் முக்கிய அதிகாரிகள் புதன்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திட உள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *