
திருகோணமலை, பெப் 2:
கிழக்கு மாகாணத்தில், அமைச்சுகளின் செயலாளர்களை அம் மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றியுள்ளார். இதற்கான கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநரால் செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக கலாமதி பத்மராஜா, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்னம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீமும், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மாகாண பிரதம செயலாளர் பதவி தொடர்ந்து வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.