விடு. புலிகளின் தலைவர் புகைப்பட விவகாரம்; 4 பேர் பிணையில் விடுவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை முகப் புத்தகத்தில் பதிவேற்றிய 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 4 பேர் இன்று நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சென்று 9-12 மணிக்குள் கையொப்பமிடல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்டையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2020 நம்பர் 27, 28ஆம் திகதிகளில் செங்கலடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் முகப் புத்தகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவிட்டதாக குறிப்பிட்டு, ஏறாவூர் பொலிசாரினால் , குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *