மகிந்த ஆட்சிக்காலத்தில் வடகொரியாவுக்கு கறுப்பு பணம் அனுப்பப்பட்டதா?

வட கொரியாவுக்கு ,போர் காலத்தில் , ராஜபக்சாக்கள் கறுப்பு பணம் அனுப்பினரா என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜித அபேவர்தன கேள்வி எழுயுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசேடமாக இன்று நாம் பேச நினைப்பது , கறுப்பு பணம் தொடர்பில் வெளியாகும் சர்ச்சையான கருத்தாகும்.

ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் வட கொரியாவில் போர் இடம்பெற்றது.

இதற்கு கறுப்பு பணம் அங்கு அனுப்பப்பட்டதா? அத்துடன் அங்கிருந்து ஆயுதங்கள் இங்கு வாங்கப்பட்டதா? இவ்வாறான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

சர்வதேச ரீதியில் ஒழுங்கற்ற ஆட்சி உள்ள நாடாக கருதப்படும் இந்நேரத்தில் இவ்வாரன ஒரு தகவல் வெளியாகியுள்ளமை நாட்டிற்கு அவதூறு ஆகும். ஏன் இங்கு ஆயுதங்கள் வாக்கப்பட்டன.

போர் காலங்களில் பணம் தேவைப்பட்டால் பாராளுமன்றத்தில் அதற்கான அறிக்கை வழங்கி பணத்தை பெற வேண்டும்.

இந்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.மற்றும் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியிற்கும் நிதி அமைச்சர் பதில் கூற வேண்டும் என்றார்.

வெளிப்படையான அறிக்கையிடல் – முதல் மூன்று இடங்களில் எந்த எந்த நிறுவனங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *