
ராகம மருத்துவ பீடத்தின் மாணவர் விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பலால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஒருவரும் அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கார் சாரதியும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இன்று பிற்பகல் ராகம பொலிஸாரிடம் சரணடைந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனைத் தவிர ஏனைய சந்தேக நபர்கள் ஐவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.