மின்சார துண்டிப்புக்கு ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்கு ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொது உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் பாரிய சிக்கலான மின்சார துண்டிப்பு சம்பந்தமாக, தீர்வை பெறுவதற்கு, ஜனாதிபதி விசாரணை குழு அமைத்து தீர்வு காணும்படி, ஜனாதிபதி செயலகத்தில் நாளை தெரிவிக்கவுள்ளோம்.

அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்படாது என்கிறார் .தொழிற்சங்கங்கள் நுரைச்சோலை கோளாறுகளால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்கிறார்கள்.யார் கூறுவதை நாம் நம்புவது.

நேற்று பன்னிபிடியவில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த நேரங்களில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கு யார் இழப்பீடு வழங்குவது. எனவே மக்களிற்கு சரியான முறையில் தீர்வை வழங்குங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *