305 லீற்றர் கோடா மற்றும் 65 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப்பகுதியில் கடந்த 31 ஆம் திகதி 305 லீற்றர் கோடா மற்றும் 65 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தருமபுரபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்ட போதே 305லீற்றர் கோடாவும் 65 லீற்றர் கசிப்புடனும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *