வடக்கு கிழக்கை பகுதிகளில் வாழும் மக்களை விட மலையக மக்கள் அதிகளவான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ், தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மலையக பெண்கள் பலர் அங்கு உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.