வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்து மகளிர் கல்லூரி அதிபரை நலம் காண சென்ற அதீன குரு!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை ஆதீன குரு மகாசந்நிதானம் நலம் காண சென்றுள்ளார்.

திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்
இன்று, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது மூன்று ஆசிரியர்களுடனும் வருகைதந்த ஒரு சில இனம்தெரியாத நபர்களால் சண்முகா இந்துகல்லூரியின் அதிபர் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் தாக்குதலில் போது மயக்கம் அடைந்து, அருகில் இருந்த ஆசிரியர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர்.

இதேவேளை , தற்போது அதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *