டொலர்களை மறைத்து வைத்திருந்த மக்கள் தற்போது சிரமத்தில்! அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia

அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை நம்பி டொலர்களை மறைத்து வைத்திருந்த மக்கள் இன்று சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இந்த நாட்டுக்கு டொலர்களை அனுப்பக் கூடாது என்று சொல்லி கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள்தான் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன. 

வெளிநாடுகளில் பணிபுரிவதாக நம்பப்படும் சிலர் டொலர்களை நாட்டுக்கு அனுப்பாமல் மறைத்து வந்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி மிகவும் வலுவடைந்து வருவதாகவும், நாட்டிற்கு 400 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளதாகவும், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகவும், கடன் மற்றும் வட்டியை செலுத்தாமை எனவும் அமைச்சர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்தவுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் சிலர் மறைத்து வைத்திருந்த டொலர்களை திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply