சமுர்த்தி பிரிவால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு

தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி கிளை மற்றும் ரெக்டோ நிறுவனம் இணைந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீரா நகரில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று கையளிக்கப்பட்டது

குறித்த நிகழ்வானது நேற்று (02) இடம் பெற்றதுடன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாத மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதிஸ்னர் கலந்து கொண்டு உரிய வீட்டினை திறந்து வைத்து பயனாளிக்கு கையளித்தார்.

குறித்த வீட்டு வளாகத்தினுள் இதன் போது பயன் தரும் தென்னை மரங்களும் நடப்பட்டன.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், ரெக்டோ நிறுவன தலைவர் அசாட் உட்பட பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *