
கிளிநொச்சி, பெப் 3: கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தால், வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடந்த இந்தப் போட்டியில், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி செல்வானந்தன் வத்சலா முதலாம் இடத்தையும், கிளி இராமநாதபுரம் மேற்கு அ.த.க. பாடசாலை மாணவி சண்முகராசா பாமகள் இரண்டாம் இடத்தையும், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சுதர்சன் யானுசா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
‘வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.