அதிபர் மீது கை வைக்காதே! நீதி வேண்டி திருமலையில் பெற்றோர் போராட்டம்

திருகோணமலை சிறி சண்முகா பாடசாலை அதிபர் குறித்த பாடசாலை ஆசிரியரால் தாக்கப்பட்டதை கண்டித்து பெற்றோரால் வலய கல்வி பணிமனை முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்விச் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் ,”அதிபர் மீது கை வைக்காதே”, “நீதி வேண்டும்” , “அடாவடி ஆசிரியர் வேண்டாம்” ஆகிய வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆசிரியரால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் பாடசாலையை முடக்கி பாடசாலை கல்விச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *