திருமலையில் அதிபரைத் தாக்கிய ஆசிரியர்; வலய கல்வி அலுவலகதில் கையொப்பமிட பணிப்பு

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு, மயக்கமுற்ற நிலையில்,நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடார்.

இந்த நிலையில், நேற்றும் பாடசாலையை முடக்கி பாடசாலை கல்விச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் திருகோணமலை வலய கல்வி அலுவலகம் முன்பாகவும் பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வலய கல்வி பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்:

குறித்த ஆசிரியரின் நியமனம், மாகாண கல்வி அமைச்சோ அல்லது வலய கல்வி அலுவலகமோ மேற்கொள்ளவில்லை.

இசுறுபாய கல்வி அமைச்சால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அந்த விடயத்தை பார்த்துக் கொள்வார்கள்.

வலய கல்வி அலுவலகம் என்ற ரீதியில், மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்ற நோக்கில், மாகாண கல்வி பணிப்பாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினேன்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு தற்காலிகமாக அறிக்கையிடாமல், வலய கல்வி அலுவலகத்தில் கையொப்பம் இடுமாறு பணிந்துள்ளோம்.

மேலதிக நடவடிக்கைகளை, பொலிசார் மற்றும் கல்வி அமைச்சு எடுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *