BIMSTEC உச்சி மாநாடு இலங்கையில்

கொழும்பு, பெப் 3: BIMSTEC உச்சி மாநாடு நிகழாண்டு மார்ச் 30 ஆம் திகதி தொடங்கி இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, இலங்கை ஆகிய 7 நாடுகள் இந்த BIMSTEC அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்த மாநாட்டின்போது, நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து இணைப்புக்கான மாஸ்டர் பிளான், குற்றவியல் வழக்குகளில் பரஸ்பர சட்ட உதவி,கடலோர கப்பல் ஒப்பந்தம் மற்றும் மோட்டார் வாகன ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று தகவலறிந்த வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *