
கிளிநொச்சி, பெப் 3: ‘ஒரு இலட்சம் பணிகள்’ எனும் வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி, பாரதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிட விஸ்தரிப்பிற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.
குறித்த கட்டிட விஸ்தரிப்பிற்காக ரூ.10 லட்சத்தை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரதும் வருமானத்தை வலுப்படுத்தி, இலங்கையை வளமான நாடாக மாற்றும் வகையிலான ‘வேத லட்சயக்’ என்ற நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
‘ஒரு லட்சம் பணிகள்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம், நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலாளர் பிரிவுகள், 14,021 கிராம சேவையாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது
இந்த திட்டத்தின் கீழ், கிராம சேவையாளர் பிரிவொன்றில் 5 அல்லது 6 திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.