
யாழ்ப்பாணம், பெப் 3: சமுர்த்திப் பயனாளர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
கரைச்சி பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளர் வை. தவநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.