ஒரு இலட்சம் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு! வெருகல்

நாடளாவிய ரீதியில் 2022 ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துக் வைக்கும் நிகழ்வு இன்று (03) காலை 8.53 சுப வேளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் பிரதான நிகழ்வு வெருகல் – சேனையூர் கிராமத்தில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தல், விவசாய உபகரணங்கள் வழங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்கள் உள்ளிட்ட பல நிகழ்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வெருகல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள்கள் ,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *