திருகோணமலையில் யானை தாக்கி கணவன் மனைவி காயம்

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட நீனாக்கேணிக் கிராமத்தில் உள்ள தமது தோட்டத்தில் காவலுக்காக தங்கியிருந்த கணவன் மனைவி இருவரையும் யானை தாக்கியதில் , காயமடைந்த நிலையில் இருவரும் மூதூர் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பேச்சி முத்தன் மகாலிங்கம் (வயது 60) , மகாலிங்கம் சரோஜாதேவி (வயது 55) ஆகிய கணவன் மனைவி இருவருமே காயமடைந்த நிலையில் கிராம மக்களால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *